செல்போனில் பேசி வந்த தாய் நடத்தையில் சந்தேகம் அடித்து கொலை இரு மகன்கள் கைது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நடத்தையில் சந்தே கம் அடைந்து தாயை அடித்துக் கொலை செய்தத இரு மகன்கள் கைது வாழப்பாடியை அடுத்த மேட்டுடையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கட்டிடதொழிலாளி பொன்னுவேல் (45) இவரது மனைவி வசந்தி (38) இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் கவின் (21). கட்டிட வேலை செய்து வருகிறார் இரண்டாவது மகன்(17 )தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்
இந்நிலையில் தனது தாய் வசந்தி வேறு ஒரு நபருடன் அடிக்கடி செல்போனில் பேசி வந்ததாக தகவல் அறிந்த மகன்கள் இருவரும் அவரது நடத்தையில் சந்தேகமடைந்து அவரைத் தட்டிக் கேட்டுள்ளனர் இதனால் தாய்க்கும் இரு மகன்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது
மேலும் ஆத்திரமடைந்த மகன்கள் இருவரும் சேர்ந்து நேற்று மதியம் வீட்டில் இருந்த வசந்தியை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர் இதில் மயக்கம் அடைந்த வசந்தியை மீட்ட அவரது உறவி னர்கள் சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்
இதுகுறித்து வசந்தியின் உறவினர்கள் அளித்த புகாரின் வசந்தயின் உடலை மீட்டு உடல் கூறு ஆய்விற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மகன்கள் இருவரையும் கைது செய்து ஏத்தாப்பூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.தாயின் நடத்தையில் சந்தோகப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
Tags : செல்போனில் பேசி வந்த தாய் நடத்தையில் சந்தேகம் அடித்து கொலை இரு மகன்கள் கைது.