அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து மகளிருக்கும் ரூ.2000 வழங்கப்படும் அமைச்சர் ஜெயராமன்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும் அனைத்து மகளிருக்கும் ரூ.2000 வழங்கப்படும் என முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிவித்துள்ளார். திருப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பொள்ளாச்சி ஜெயராமன், "தமிழகத்தில் இன்று நல்ல திட்டங்கள் எதுவும் இல்லை. இன்னும் 10 அமாவாசையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் நல்லாட்சி அமையும். அதன்பின், அனைத்து மகளிருக்கும் மாதம் தோறும் ரூ.2000 வழங்கப்படும்" என தெரிவித்தார்.
Tags :