பணகுடியில் பாம்பு வைத்திருந்தவர் கைது.

நெல்லைமாவட்டம் பணகுடி பகுதி நெடுஞ்சாலையில் காவல்துறையினரின் இரவு ரோந்து பணியின் போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்பொழுது அவர் பையில் மண்ணுளி பாம்பு ஒன்று மறைத்து வைத்திருந்தது கைப்பற்ற பட்டது.பிடிபட்ட பொருள் வன உயிரினம் என்பதால் கன்னியாகுமரி மாவட்ட வன அலுவலர் பிரசாந்த்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் பூதப்பாண்டி வனச்சரக அலுவலர் ரவீந்திரன் தலைமையில் வனவர் பாலச்சந்திரிகா,வனக்கப்பாளர்கள் .பிரதீபா,வனஜா மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் .சரவணன்,
தனிஸ்,மாசானமுத்து ஆகியோர் சம்பவ இடம் விரைந்து சென்று குற்றவாளியான சாமியார்மடம் பகுதியில் வசிக்கும் சிவகுமார் (33) யும் அவர் கடத்த முயன்ற மண்ணுளி பாம்பினையும் பணகுடி காவல் நிலையத்தில் இருந்து பெற்று குற்றவாளியை நாகர்கோவில் வன வழக்குகள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags : நெல்லைமாவட்டம் பணகுடி