கேரள மீனவர்கள் அத்துமீறில்; மீனவர்கள் குற்றச்சாட்டு

தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறைதீர்க்கும் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வைத்தனர். இதில் மீன்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளர் சங்கம் சார்பில் ஏப்ரல் 14-ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்களுக்கு தடைக்காலம் துவங்க உள்ள நிலையில் தமிழக அரசு தடைக்காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையை ரூபாய் 15,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் தடைக்காலங்களில் தமிழக கடல் பகுதிகளில் கேரள மீனவர்கள் அத்துமீறி நுழைந்து மீன் பிடிப்பதை தடுத்து நிறுத்த மீனவர்கள் அடங்கிய கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மேலும் 2023 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்துள்ள கடற்கரை மேலாண்மை திட்டத்தின் வரைபடத்தில் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ கிராமங்கள் மற்றும் கடல் பகுதியில் உள்ள மீன் வளங்கள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதார இடங்கள் ஆகியவை குறித்து முறையாக குறிப்பிட வேண்டும். இதற்கு தமிழக அரசின் மீன்வளத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags :