பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே நிலையங்களில் சோதனை 

by Editor / 04-12-2023 10:54:25pm
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே நிலையங்களில் சோதனை 

 டிசம்பர் 6-ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பாதுகாப்பை பலப்படுத்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின்படி, மாவட்டம் முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் முக்கிய பஜார்கள், பேருந்து நிலையங்கள், கடைவீதிகள் என அனைத்து இடங்களிலும் எவ்வித அசம்பாவிதமும் நடந்திடாத வண்ணம்  காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர். இதன் ஒரு பகுதியாக   இன்று திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதிகளில் உள்ள ரயில்வே நிலையங்களை மோப்பநாய் படை மற்றும் வெடிகுண்டு செயலிழக்கும் படை பிரிவினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து இரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கிய இடங்களில் சோதனை மேற்கொள்ள உள்ளனர்.

பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே நிலையங்களில் சோதனை 
 

Tags : பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ரயில்வே நிலையங்களில் சோதனை 

Share via