மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

by Editor / 04-12-2023 11:40:08pm
 மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னையில் வரலாறு காணாத கனமழை பெய்து வந்தது. இதனால், மொத்த சென்னையின் பல இடங்கள் வெள்ளத்தில் மிதந்தது இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழை தற்போது குறைந்துள்ளது. மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் மின்சாரம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. மிக்ஜாம் புயல் சென்னையில் இருந்து 120 கி.மீ தொலைவில் வடக்கு திசை நோக்கி நகர்கிறது. தொடர்ந்து நாளை முற்பகல் ஆந்திரா கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும்.

 

Tags :  மழை குறைந்துள்ளதால் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

Share via

More stories