மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகள்

by Editor / 04-04-2025 04:58:20pm
மாமனாரை கொடூரமாக தாக்கிய மருமகள்

உ.பி.யில் பிஜ்னோர் கோட்வாலி நகரின் ஸ்வாஹேதி கிராமத்தில் மருமகள் ஒருவர் தனது மாமனாரை கட்டையால் கடுமையாக தாக்கியுள்ளார். பாதிக்கப்பட்டவர் இதுதொடர்பாக உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது இளைய மகனும் மருமகளும் நிலத்தின் மீது பேராசை கொண்டு தன்னை கொடூரமாக அடித்து, நிலத்தை அபகரிக்க முயன்றதாக அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via