சந்தேகங்களை போக்க வேண்டியது அரசின் கடமை - இபிஎஸ்

by Staff / 08-07-2024 02:35:38pm
சந்தேகங்களை போக்க வேண்டியது அரசின் கடமை - இபிஎஸ்

பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்தவர்கள் உண்மைக் குற்றவாளிகள் அல்ல, போலி குற்றவாளிகள் என அவரது உறவினர்கள், கட்சியினர் கூறுகின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டியளித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி, "உண்மைக் குற்றவாளிகளை கண்டறிந்து, ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர்கள், ஆதரவாளர்கள் எழுப்பும் சந்தேகங்களை போக்க வேண்டியது அரசின் கடமை" என வலியுறுத்தியுள்ளார்.
 

 

Tags :

Share via