காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

by Staff / 12-06-2022 04:26:27pm
காஷ்மீரின் புல்வாமா பகுதியில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை


ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா பகுதியில் நேற்றிரவு தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்  அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் மூவரும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தொடர்புடைய உள்ளூர் நபர்கள் என்று காவல்துறை ஐஜி விஜயகுமார் தெரிவித்தார். அப்பகுதியில் மேலும் சிலர் பதுங்கி இருக்கலாம் என்பதால் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via

More stories