கொடநாடு வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படவில்லை _ அமைச்சர் ரகுபதி பேட்டி

by Admin / 23-08-2021 12:24:27pm
கொடநாடு வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படவில்லை _ அமைச்சர் ரகுபதி பேட்டி

செப்டம்பர் ‌1ம் தேதி முதல் அனைத்து அரசு  சட்டக்கல்லூரிகளும் அம்பேத்கர் பல்கலைக்கழகத்திள்கு கீழ் செயல்படக்கூடிய சட்டக்கல்லூரிகளும் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படும்,

 உயர்நீதிமன்றம் வழிகாட்டுதலின் படி ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும்,

சிறையில் உள்ள அகதிகளுக்கு அடிப்படை வசதிகள் கொடுத்து பாதுகாக்க மட்டுமே தமிழக அரசால் முடியும் அவர்களை வெளியே விடுவது ஒன்றிய அரசின் கையில் தான் உள்ளது,

கொடநாடு வழக்கு இன்னும் முடித்து வைக்கப்படவில்லை சாட்சியங்கள் வாக்குமூலம் தர முன்வந்தால் கொடுக்கலாம் என்ற அடிப்படையில்தான் வழக்கு செல்கின்றது அதை விடுத்து
யாரையும் அச்சுருத்தவோ பயமுறுத்தவோ அயூதமாக கொடநாடு வழக்கை பயன்படுத்தவில்லை, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியது தான் செய்து வருகின்றது, இதற்கு சிலர் கோவம் அடைவது அரசை குறை கூறுவது ஏற்புடையதல்ல, கொடநாடு வழக்கில் நியாயம் கிடைக்க வேண்டும் இதில் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா தற்கொலைக்குத் தூண்டுபவர்கள் அல்லது கொலையா என்பது விசாரணையின் முடிவிலேயே தெரியவரும்.... புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி.

 

Tags :

Share via