பிளஸ்-2 மாணவர் திடீர் மரணம்

by Editor / 19-04-2025 05:06:19pm
பிளஸ்-2 மாணவர் திடீர் மரணம்

கோவையை அடுத்த சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையம் பெர்க்ஸ் ரோட்டில் வசித்து வரும் பிரசன்னா பாலாஜியின் மகன் ரித்திக் (17). இவர் வெள்ளலூர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று வீட்டில் ரித்திக் திடீரென வாந்தி எடுத்தார்.உடனே ரித்திக்கின் தந்தை மற்றும் அக்கம்பக்கத்தினர் அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலனின்றி ரித்திக் இறந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இது குறித்து ரித்திக்கின் தந்தை பிரசன்னா பாலாஜி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

 

Tags :

Share via