சொந்த மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட தந்தை

14 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்த தின கூலித் தொழிலாளி தனது மனைவியை பிரிந்து 2 மகள்களுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து 14 வயது மகளிடம் பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். இறுதியாக தனது பொருட்களை எடுத்துச் செல்ல வீட்டுக்கு வந்த தாயிடம் மகள் நடந்ததை கூறியதால் உண்மை அம்பலமானது. தலைமறைவான நபருக்கு போலீசார் வலைவீசியுள்ளனர்.
Tags :