தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ஊஞ்சலூரில் 8 நாள் நின்று சொல்லும்

by Staff / 07-10-2023 05:58:34pm
தூத்துக்குடி - மைசூர் எக்ஸ்பிரஸ் ஊஞ்சலூரில் 8 நாள் நின்று சொல்லும்

ஸ்ரீ சத்குரு சேஷாத்ரி சுவாமிகளின் 95வது ஆராதனை விழா ஊஞ்சலூரில் உள்ள ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானத்தில் நடைபெற இருக்கிறது. எனவே பயணி வசதிக்காக டிசம்பர் 30 முதல் ஜனவரி 6 வரை 8 நாட்களுக்கு தூத்துக்குடி - மைசூர் - தூத்துக்குடி விரைவு ரயில் (16235/16236) மற்றும் கோயம்புத்தூர் - நாகர்கோவில் - கோயம்புத்தூர் பகல் நேர விரைவு ரயில்கள் (16322/16321) ஆகியவை கரூர் - ஈரோடு ரயில் நிலையங்கள் இடையே உள்ள ஊஞ்சலூர் ரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

 

Tags :

Share via