குரு பெயர்ச்சியினை முன்னிட்டு புகழ்பெற்ற புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்.

by Editor / 11-05-2025 12:32:21am
குரு பெயர்ச்சியினை முன்னிட்டு புகழ்பெற்ற புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்.

ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு குரு பகவான் நாளைய தினம் பெயர்ச்சியாக உள்ள நிலையில், குரு பெயர்ச்சி விழாவினை முன்னிட்டு பல்வேறு குரு தளங்களில் சிறப்பு பூஜைகள் நடத்துவதற்கான ஆயத்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய குரு பகவான் தளமான புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் இன்று குரு பெயர்ச்சி விழாவானது வெகு விமர்சையாக நடைபெற உள்ள நிலையில், இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என்பதால் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் கோவிலில் செய்யப்பட்டுள்ளது.

 குறிப்பாக, 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்கள் நிகழாமல் இருக்க கோவில் வளாகம் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியும் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

 மேலும், பெயர்ச்சி நடைபெற உள்ள காலை 10:59மணிக்கு பக்தர்கள் கூட்டம் அளவுக்கு அதிகமாக காணப்படும் என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படாதவாறு கோவில் வளாகம் முழுவதும் பக்தர்கள் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்வதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு கரையாளனுர் சண்முகவேல் சார்பில் அன்னதான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : குரு பெயர்ச்சியினை முன்னிட்டு புகழ்பெற்ற புளியரை தட்சிணாமூர்த்தி கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிரம்.

Share via