சேலத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று.

by Editor / 18-05-2025 08:50:41pm
சேலத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று.

சேலம் மாவட்ட அரசு மருத்துவமனையில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாதகாப்பட்டியைச் சேர்ந்த 4 பேருக்கும், வேறு சில பகுதிகளைச் சேர்ந்த 5 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தவிர 20 பேரின் ரத்த மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags : சேலத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று

Share via