’என் மாமாவை போலவே இருந்ததால் கொலை செய்தேன்’

அமெரிக்காவில் சக இந்தியரை மற்றொருவர் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனை சேர்ந்த அக்ஷய் குப்தா (30) என்பவர் பேருந்தில் உட்கார்ந்திருந்த போது திடீரென அருகில் வந்து அமர்ந்த தீபக் (31) என்பவர் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் தீபக்கை கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில், "என் மாமாவை போலவே குப்தா இருந்ததால் அவரை கொன்றேன்" என்றார்.
Tags :