7 நாட்களுக்குப் பிறகு குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி.

by Editor / 01-06-2025 08:55:17am
7 நாட்களுக்குப் பிறகு குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி.

தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீரோடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில், குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் கடந்த 25-ஆம் தேதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது விதிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாள்தோறும் மழையின் அளவு குறையாமல், அருவிகளில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கானது நிலவி வந்த நிலையில், நேற்று வரை 7-வது நாளாக குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளின் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில், நேற்றைய தினம் மழை குறைந்து தற்போது அருவிகளில் சற்று தண்ணீர் வரத்து குறைந்துள்ள நிலையில், 7 நாட்களுக்குப் பிறகு தற்போது சுற்றுலா பயணிகள் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தற்போது குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் 7 நாட்களுக்குப் பிறகு குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : 7 நாட்களுக்குப் பிறகு குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி.

Share via