இசைஞானி இளையராஜாவின் பேரன் முதல் பக்தி பாடல் ரமண மகரிஷி ஆசிரமத்தில் வெளியீடு.

இசைஞானி இளையராஜாவின் பேரனும், கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஷ்வர் ராஜா திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அமைந்துள்ள ரமண மகரிஷி ஆசிரமத்தில் அண்ணாமலையார் திருப்புகழை பறைசாற்றும் விதமாக முதன் முதலாக அவரே இசையமைத்து பாடிய முதல் பக்தி பாடல் குறுந்தகடை ஆசிரம நிர்வாகி சுசிலா ரமணன் வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்த நமசிவாயம் என்று ஆரம்பிக்கக்கூடிய அந்தப் பக்தி பாடலை ரமண ஆஸ்ரமத்தில் ஒலிக்க செய்து அதனை அங்கு இருந்தவர்கள் மனம் உருகி ரசித்து யத்திஷ்வர் ராஜாவை பாராட்டி சால்வை அணிவித்து ரமணரின் புகைப்படத்தை வழங்கி கௌரவம் செய்தனர்.
முன்னதாக இளையராஜாவின் பேரனும் கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர்ராஜா கூறுகையில்
தனக்கு பக்தி பாடல் பாட வேண்டும் என்ற ஆசையில் முதல் பாடலை அண்ணாமலையார் குறித்து பாடியது தனக்கு மிகுந்த பெருமையாக உள்ளதாகவும், இதற்காக தாத்தா பல்வேறு அறிவுரைகளை வழங்கியதாகவும் கூறியவர், தந்தையின் உதவியோடு இரண்டு நாட்களில் அனைத்தும் நிறைவடைந்ததாகவும், சினிமாவில் பணிபுரிய தனக்கு ஆசையாக உள்ளதாகவும் வாய்ப்பு கிடைத்தால் அதனை முறையாக பயன்படுத்திக் கொள்வேன் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
Tags : இசைஞானி இளையராஜாவின் பேரன் முதல் பக்தி பாடல் ரமண மகரிஷி ஆசிரமத்தில் வெளியீடு.