வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை. போலீஸார் விசாரணை...

by Editor / 16-06-2025 04:50:54pm
வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை. போலீஸார் விசாரணை...

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வாலிபர் தூக்கிலிட்டு தற்கொலை. போலீஸார் விசாரணை.
சிவகாசி அருகே உள்ள பெரியபொட்டல்பட்டியை சேர்ந்தவர் குருவையா மகன் சிவானந்தன் (வயது 25). இவர் பி. ஏ. , பி. எட். , , முடித்துவிட்டு துலுக்கன்குறிச்சியில் உள்ள அரசு பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். விடுமுறை நாட்களில் கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். வாலிபர் சிவானந்தன் செல்போனில் அதிக நேரம் பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களிடம் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியுள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தோட்டத்திற்கு சென்ற அவர், வேப்பமரத்தில் மாடு கட்டும் கயிறு வைத்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து சிவானந்தன் தந்தை குருவையா கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்கு பதிவு செய்து இறவரின் உடலை கைப்பற்றி எதற்க்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo