சக மாணவியுடன் பேசியதால் கண்டிப்பு.. மாணவன் தற்கொலை

by Editor / 01-07-2025 03:48:15pm
சக மாணவியுடன் பேசியதால் கண்டிப்பு.. மாணவன் தற்கொலை

தஞ்சாவூரில் ஸ்ரீராம் (16) என்ற மாணவன், வகுப்பில் சக மாணவியுடன் பேசியதாக ஆசிரியர் கண்டித்ததையடுத்து மனமுடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது அறையில் கண்டெடுக்கப்பட்ட சுயக் குறிப்பில், வகுப்பு ஆசிரியர் சிமாஸ் ராஜ் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீராமின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தியதால், போலீசார் சிமாஸ் ராஜ் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
 

 

Tags :

Share via

More stories