திருமலா பால் நிறுவன மேலாளர் நவீன் மரணம் தற்கொலையே

திருமலா பால் நிறுவனத்தில் ரூ.40 கோடி முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. இந்த பணத்தை நிறுவன மேலாளர் நவீன் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது. இதுகுறித்து நவீனிடம் போலீசார் விசாரித்து வந்த நிலையில் வீட்டருகே உள்ள குடிசையில் தூக்கில் தொங்கிய நிலையில் நவீன் சடலமாக கிடந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் எழுந்த நிலையில், ”இதுவரை நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் நவீன் தற்கொலை செய்ததாகவே தெரிகிறது” என்று சென்னை காவல் ஆணையர் அருண் கூறினார்.
Tags :