மனைவிக்கு மொட்டை அடித்து கொலை?.. கணவர் மீது சந்தேகம்

கேரளாவைச் சேர்ந்த விபன்சிகா மணியன் (32) என்ற பெண்ணும், தனது ஒரு வயது மகளும் கடந்த 8ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து அப்பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரில், “விபன்சிகாவின் கணவர் நிதீஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சனை கேட்டு, உடல் மற்றும் மனதளவில் தொல்லை கொடுத்து வந்தனர். விபன்சிகா அழகாக இருப்பதால், அவருக்கு மொட்டை அடித்துவிட்டனர். பல பெண்களோடு நிதீஷுக்கு தொடர்பு உள்ளது. இதனை எதிர்த்த விபன்சிகா மற்றும் குழந்தையை, நிதிஷ் கொலை செய்திருக்கலாம்” என குற்றம்சாட்டியுள்ளனர்.
Tags :