தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் 3,000 ரூபாய் வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு
2026 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் 3000 ரூபாய் ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசு தொகப்பினை வழங்க தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள 2. 20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவர். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் 3000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன. நியாய விலை கடைகள் மூலம் டோக்கன் அடிப்படையில் இந்த பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது.
Tags :



















