முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று முதலமைச்சர் மு. க .ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைவதற்கு முன்னதாக அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல். கடந்த வாரம் சட்டமன்ற வளாகத்தில் முதலமைச்சரை சந்தித்து ஓ.பி.எஸ் திமுக அரசின் செயல்பாடுகளை பாராட்டியதுடன் 2026 தேதியிலும் திமுகவை வெற்றி பெறும் எனக் கூறியிருந்தார். இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.
Tags :


















