சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் 10 முதல்வர் படைப்பவங்களை திறந்து வைத்தார்.

by Admin / 03-03-2026 06:26:32pm
சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் 10 முதல்வர் படைப்பவங்களை திறந்து வைத்தார்.

சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் 10 முதல்வர் படைப்பவங்களை திறந்து வைத்தார். அசோக் நகரில் 12 புள்ளி 74 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஒரு பிரதான படைப்பகத்தை நேரில் திறந்து வைத்த முதலமைச்சர் மற்ற ஒம்போது படைப்பகங்களை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த நவீனன் நூலகம் வைபை வசதியுடன் கூடிய பணியிடங்கள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான படிப்பு மையங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் மூலம் மொத்தம் 16 புள்ளி 87 கோடி செலவில் இந்த படைப்பகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தொழில் முனைவோர் மற்றும் வேலை தேடும் இளைஞர்களுக்கு மலிவு விலையில் உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய பணி மற்றும் கற்றல் சூழலில் வழங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் இத்திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் முதல்வர் படைப்பகம் கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பெரியார் நகரில் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் இன்று தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் 10 முதல்வர் படைப்பவங்களை திறந்து வைத்தார்.
 

Tags :

Share via

More stories

Logo