புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

by Admin / 09-03-2023 04:10:18pm
 புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தலைமைச்செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ. 189.49 கோடி செலவிலான புதிய கட்டடங்கள், நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள மாவட்ட கால்நடை பண்ணையில் ரூ. 47.50 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள பாலினம் பிரிக்கப்பட்ட உறைவிந்து உற்பத்தி நிலையம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ. 61.32 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் சார்பில் ரூ. 11.66 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தோடுகால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ. 2.40 கோடி மதிப்பிலான உறைவிந்து குச்சிகள் மற்றும் திரவ நைட்ரஜன் விநியோகம் செய்வதற்கான 16 வாகனங்களை வழங்கிடும் விதமாக 3 ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளையும்  வழங்கினார்

 புதிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
 

Tags :

Share via