பிரிட்ஜில் குழந்தை பலி

by Editor / 04-09-2021 05:37:05pm
பிரிட்ஜில் குழந்தை பலி

கேரள மாநிலம் கோட்டயம் என்ற பகுதி அருகே குரவிலங்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் அலல். இவரது மனைவி ஸ்ருதி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்த தம்பதிக்கு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் ரூட் மரியம் அலல் என்ற குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று குழந்தை ரூட் மரியம் அலல் ஒளிந்து விளையாடுவதற்காக வீட்டில் இருந்த பிரிட்ஜ் பின்னால் சென்றதாக தெரிகிறது. அப்போது பிரிட்ஜில் இருந்த மின்சாரம் எதிர்பாராதவிதமாக திடீரென குழந்தையை தாக்கியதை அடுத்து குழந்தை தூக்கி வீசப்பட்டது.

இதனால் படுகாயம் அடைந்த குழந்தையை அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரிட்ஜ் பின்னால் ஒளிந்து விளையாடியதால், மின்சார கசிவு காரணமாக ஒன்றரை வயது குழந்தை பலியானதை அடுத்து அதன் பெற்றோர்கள் கதறி துடித்தது காண்போரை கண்ணீர் வரவழைக்கும் வகையில் சோகமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via