உணவகத்தில் சாப்பிட்ட பெண் குழந்தை உயிரிழப்பு

by Editor / 11-09-2021 07:45:53pm
உணவகத்தில் சாப்பிட்ட பெண் குழந்தை உயிரிழப்பு

ஆரணியை சேர்ந்த அம்ஜத் பாட்ஷா என்பவரின் அசைவ 7 ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது. மேலும் நேற்று ஆரணி அருகே துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குபட்ட லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கு பிரியதர்ஷினி, என்ற மனைவியும் ,லோசினி என்ற 10 வயது மகளும் சரண் 14 வயது மகன் ஆகியோர் நேற்று முன்தினம் ஆரணியில் உள்ள 7 ஸ்டார் ஓட்டலுக்கு சென்று தந்தூரி பிரியாணி சாப்பிட்டு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றனர். இதில் மேல்சிகிச்சைக்காக, வேலூர் தனியார் மருத்துவமனையில் ஆனந்த் சரண் பிரியதர்ஷினி ஆகியோர் அனுப்பி வைத்தனர். இதில் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 10 வயது பெண் குழந்தை லோசினி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

 

Tags :

Share via