மோட்டார் சைக்கிளில் மலைப்பாம்புடன் சுற்றிவந்து சாகசம் செய்த வாலிபர்

by Admin / 10-02-2022 01:20:29pm
 மோட்டார் சைக்கிளில் மலைப்பாம்புடன் சுற்றிவந்து சாகசம் செய்த வாலிபர்

கேரளாவில் கோட்டயம் பகுதியில் சமீபத்தில் பாம்பு பிடிக்க சென்ற வாவா சுரேசை பாம்பு கடித்தது.

வாவா சுரேசை பாம்பு கடிக்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள், கடந்த சில நாட்களாக வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் மலைப்பாம்புடன் சுற்றி வரும் காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவியது.
 
அந்த வீடியோவில் மோட்டார் சைக்கிளில் செல்லும் வாலிபருடன் மலைபாம்பு ஒன்றும் இருந்தது. இதை பார்த்து அருகில் செல்லும் மக்களிடம் அந்த வாலிபர், பாம்புடன் பேசுவது போலவும், அதனை பிடித்து சுற்றுவது போலவும் சாகசங்கள் செய்கிறார்.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் பலரும், வீடியோவில் இருக்கும் வாலிபரை விமர்சித்து கருத்து பதிவிட்டனர். மேலும் இதுபற்றி போலீசார் மற்றும் வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் வீடியோவில் இருந்த வாலிபர் யார் என விசாரித்தனர். இதில் அவர் கோழிக்கோடு, முச்சுக்குன்னு பகுதியை சேர்ந்த ஜித்து என தெரியவந்தது.

இதற்கிடையே வனத்துறை அதிகாரிகளும் இந்த சம்பவம் குறித்து விசாரணையில் இறங்கினர். பின்னர் அவர்கள் ஜித்துவை பிடித்து விசாரித்ததோடு, அவரிடம் இருந்த மலைபாம்பையும் கைப்பற்றினர்.கைப்பற்றப்பட்ட மலை பாம்பை வனத்துறையினர் பெருவண்ணாமுழி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
 

 

Tags :

Share via