வி சிகர் அலுவலக முன்பாக எதிர்பார்ப்போடு விஜய் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள்.
நேற்று தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆதார் வலியுறுத்து கடிதம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்து விஜய் நேரில் சென்று கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மரியாதை செய்தார். இந்நிலையில் இன்று விடுதலைச் சிறுத்தை கட்சி தன்னுடைய ஆதரவு நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கிற நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி அசோக் நகர் அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் குவிந்துள்ளார்கள். விஜய் ஆதரவு நிலைப்பாட்டை திருமாவளவன் அறிவித்தவுடன் அவர் நேரில் வந்து நன்றி தெரிவிக்க வருவார் என்கிற எதிர்பார்ப்போடு விஜய் தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். அதனால் காவல் துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். எந்த நேரத்திலும் விஜய் வரலாம் என்கிற பரபரப்புக்கு இடையில் அவர் ஒரு மணி அளவில் மாமல்லபுரத்தில் தனது கட்சி எம்எல்ஏக்களை சந்திக்க உள்ளதாகவும் செய்தி வந்த வண்ணம் உள்ளது.
Tags :


















