கோதுமை மாவு வாங்கச்சென்ற 11 பேர் பலி

by Staff / 30-03-2023 11:31:08am
கோதுமை மாவு வாங்கச்சென்ற 11 பேர் பலி

பாகிஸ்தானில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி வருகிறது. பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். அங்குள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் ஏழைகளுக்கு இலவச கோதுமை மாவு விநியோக மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக எண்ணிக்கையில் மக்கள் வருவதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மூன்று பேர் இறந்தனர். பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடியால், அத்தியாவசியப் பொருட்களாக எரிவாயு சிலிண்டர், பால், உணவு தானியங்களின் விலை அதிகரித்து, மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo