கதவு பூட்டு உடைக்கப்பட்டு நகை ,பணம் கொள்ளை

by Editor / 16-09-2021 12:11:47pm
 கதவு பூட்டு உடைக்கப்பட்டு நகை ,பணம்  கொள்ளை

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவசக்தி நகர் பகுதியில் இரும்பு கடை உரிமையாளரான முகமது இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு சென்னையில் இருக்கும் ஒரு கல்லூரியில் படிப்பதற்காக தனது மகளை விடுவதற்காக குடும்பத்துடன் சென்றுள்ளார். அப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்த அக்கம்பக்கத்தினர் இது பற்றி முகமது இஸ்லாமியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதன் பேரில் முகமது இஸ்மாயில் தனது வீட்டுக்கு சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம், 750 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 2 பவுன் தங்க நகை திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக முகமது இஸ்மாயில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via