பங்காரு அடிகளாரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டி

by Editor / 19-09-2021 10:26:14am
பங்காரு அடிகளாரின் மனைவி உள்ளாட்சி தேர்தலில் போட்டி

உள்ளாட்சி தேர்தலில் பங்காரு அடிகளின் மனைவி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் சித்தாமூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மேல்மருவத்தூர் சக்திபீடம் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் மாற்றுவேட்பாளாராக அவரது மகன் செந்தில் குமார் மனு தாக்கல் செய்துள்ளார். மேல்மருவத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பங்காரு அடிகளாரின் குடும்பத்திற்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. இதனால் அவர்களை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அந்த ஊராட்சி தனிதொகுதியாக இருந்தது. தற்போது மீண்டும் பொது தொகுதியாக மாறப்பட்டுள்ளதால் லட்சுமி மனுதாக்கல் செய்துள்ளார். இவர் ஏற்கனவே அங்கு ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார் என்பது குறிப்பிட தக்கது.

 

Tags :

Share via