ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்

by Editor / 19-09-2021 10:33:54am
ஆன்லைனில் ₹10 கோடிக்கு ஏலம் போன ஒரு ரூபாய் காயின்

சமீபத்தில் அரிய நாணயம் ஒன்று ரூ .10 கோடிக்கு ஆன்லைன் ஏலத்தில் விற்கப்பட்டது. முதலில் இது நம்பமுடியாததாக செய்தியாகத் தோன்றலாம் ஆனால் இந்த குறிப்பிட்ட நாணயத்திற்கு கோடிக் கணக்கில் பணம் கிடைக்க காரணம் உண்டு.

இந்த ஒரு ரூபாய் நாணயம் சமீபத்தில் ரூ.10 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டது, ஏனெனில், இந்த அரிய நாணயம் இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி செய்த காலத்தில் 1885 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இது லாட்டரி சீட்டுக்கு குறையாமல் பணத்தை வாரித் தந்துள்ளது.எனவே உங்கள் வீட்டில் உள்ள பழைய நாணயங்களை ஆராயவும். அதில் அரிய நாணயம் இருந்தால், உங்களுக்கும் ஏராளமான பணம் கிடைக்கும். மேலும் பழைய நாணயங்கள் மற்றும் நாணயங்களைச் சேகரிப்பதில் ஏதேனும் ஆராய்ச்சி செய்யலாம். ஏனெனில் ஒரு அரிய நாணயம் உங்களை ஓர் இரவில் கோடீஸ்வரர் ஆக்கலாம்.

பழைய மற்றும் அரிய நாணயங்களை விற்கும் பல வலைத்தளங்கள் உள்ளன. இந்த வலைத்தளங்களில் ஒன்று CoinBazar ஆகும், அங்கு பயனர்கள் பெயர், முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் போன்ற அடிப்படை விவரங்களை உள்ளிட்டு பதிவு செய்யலாம். அதில தங்களிடம் உள்ள அரிய வகை காயின்கள் அல்லது ரூபாய் நோட்டுகளை விற்று எளிதில் பணக்காரர் ஆகலாம்.

முன்னதாக ஜூன் மாதம், 1933 ஆண்டின் அமெரிக்க நாணயம் ஒன்று, நியூயார்க்கில் நடந்த ஏலத்தில் 18.9 மில்லியன் டாலர்களுக்கு (அதாவது ரூ.138 கோடி) விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via