முதியவரை வெட்டிக் கொலை செய்த வாலிபருக்கு  ஆயுள் தண்டனை : தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

by Editor / 23-09-2021 05:35:41pm
 முதியவரை வெட்டிக் கொலை செய்த வாலிபருக்கு  ஆயுள் தண்டனை : தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு


கயத்தூறு அருகே முதியவரை வெட்டிக் கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கயத்தூறு அருகே வடக்கு இலந்தைகுளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த சண்முகராஜ் மனைவி காளீஸ்வரி (26) என்பவர் கடந்த 23.01.2019 அன்று தனது குழந்தையை திட்டியதை அதே பகுதியைச் சேர்ந்த சுடலைமுத்து மகன் பாலமுருகன் (27) என்பவர் தனது தாயாரை திட்டியதாக கருதி காளீஸ்வரியை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார்.


அப்போது தடுக்க வந்த காளீஸ்வரியின் தாத்தாவான  முத்தையா மகன் ஆறுமுகம் (எ) ஆறுமுக பெருமாள் (60/19) என்பவரை பாலமுருகன் அரிவாளால் தாக்கியதில் பலத்த காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு போலீசார் கொலை வழக்குப் பதிந்து பாலமுருகனை கைது செய்தனர். 


இவ்வழக்கு விசாரணை  தூத்துக்குடி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டியராஜன், பாலமுருகனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.100  அபராதம் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார். இவ்வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய கயத்தாறு காவல் ஆய்வாளர் ஆவுடையப்பன், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் சுபாஷினி, விசாரணைக்கு உதவியாக இருந்த காவலர்கள் சுடலைமணி  மற்றும் அழகுமுத்து பாண்டியன் ஆகியோரையும் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்

 

Tags :

Share via