வாக்காளர்களுக்கு விநியோகித்த புடவைகள் பறிமுதல்

by Editor / 06-10-2021 09:55:41am
வாக்காளர்களுக்கு  விநியோகித்த புடவைகள் பறிமுதல்

திண்டிவனம்ஒலக்கூர் அருகே புடவை மற்றும் மது பாட்டில்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்நெமிலி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு புடவை கொடுப்பதாக நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. 

இதையடுத்து விழுப்புரம் கோட்ட கலால் அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் போலீசார் அப்பகுதிக்குச் சென்று சோதனை நடத்தினர்.அதிகாரிகளைப் பார்த்ததும், புடவைகள் மற்றும் மது பாட்டில்களை அப்படியே போட்டு விட்டு தப்பிச் சென்றனர். உடன், அதிகாரிகள், 94 புடவைகள், 17 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்து, ஒலக்கூர் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் நாராயணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். தப்பியோடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via