பாமக செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிப்படுகொலை  

by Admin / 23-10-2021 02:23:33pm
பாமக செயலாளர் மர்ம கும்பலால் வெட்டிப்படுகொலை  

காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி, நேற்றிரவு 10 மணியளவில் திருநள்ளாறு சனி பகவான் கோவில் அருகே உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்து  வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்

அப்போது, அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள், மோட்டார் சைக்கிளை வழிமறித்து, தேவமணியை சரமாரியாக வெட்டி சாய்த்து விட்டு தப்பியோடியுள்ளனர்.
 
இதில் படுகாயமடைந்த தேவமணி, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 

Tags :

Share via