கல்லூரி மாணவர் மோதல்
பொன்னேரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவருக்கு அரிவாள் வெட்டு. மாநிலக் கல்லூரி மாணவர்கள் தாக்கியதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இருவர் காயம்.
பொன்னேரி அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகே பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகிய இருவர் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது மாநிலக் கல்லூரி மாணவர்கள் இருவரிடம் தகராறில் ஈடுபட்டு ரயில் நிலையத்தில் பயங்கர மோதலாக மாறி ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி மோதிக் கொண்டனர்.
பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கார்த்திக், ஆகாஷ் ஆகிய இருவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடி விட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீஞ்சூர் போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :