துபாயிலிருந்து தங்கம் கடத்தல்...

by Editor / 29-10-2021 03:16:02pm
துபாயிலிருந்து தங்கம் கடத்தல்...

துபாயிலிருந்து திருச்சி வந்த பயணி இரண்டு பேரிடம் 77 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கைப்பற்றி அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சார்ஜாவிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த  ஏர் இந்தியா விமானத்தின் பயணிகளை  விமான நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

 அதில் இரண்டு பயணிகள்  தங்கம் கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு பயணியை சோதனை செய்ததில் ஆசனவாயில் பேஸ்ட் வடிவில் மறைத்து கொண்டு வரப்பட்ட 42 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 870 கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர்.

 மற்றொரு நபர் எலக்ட்ரானிக் தராசில் மறைத்துக் கொண்டு வரப்பட்ட 34 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக குறிப்பிட்டனர்.

 

Tags :

Share via