கலாம், நடிகர் விவேக்கின் பணியை தொடருவோம்: வாடிப்பட்டியில் உறுதி ஏற்ற ஓட்டுநர்கள்!

by Editor / 29-04-2021 09:22:28am
கலாம், நடிகர் விவேக்கின் பணியை தொடருவோம்: வாடிப்பட்டியில் உறுதி ஏற்ற ஓட்டுநர்கள்!

வாடிப்பட்டி சந்தை வாசல் பகுதியில் வேன் ஓட்டுநர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணி, முருகன், பொன்னுச்சாமி, பாலமுருகன், கோபி ஆகியோர் ஒருங்கி ணைந்து வெப்பமயமாதலைத் தணிக்கும் விதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நடிகர் விவேக் ஆகியோரின் 1 கோடி மரக்கன்று நடும் கனவுத்திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்தனர். மேலும் சோழ வந்தான் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டு பணியைத் தொடங்கினர். வாடிப்பட்டி சந்தைவாசல் வேன் ஓட்டுநர்கள் சங்க ஒருங்கி ணைப்பாளர் ராஜேந்திரன் இதுகுறித்து கூறியதாவது:

அப்துல்கலாம், விவேக் விதைத்த விதைகள் இன்று மரமாகி உள்ளன. அவர்களின் வழியில் எங்கள் வருவாயில் குறிப்பிட்ட தொகையில் மரக்கன்றுகளை நடவு செய்வோம். தேவைப்படுவோருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குவோம் என்றார்.

கலாம், நடிகர் விவேக்கின் பணியை தொடருவோம்: வாடிப்பட்டியில் உறுதி ஏற்ற ஓட்டுநர்கள்!

வாடிப்பட்டி சந்தை வாசல் பகுதியில் வேன் ஓட்டுநர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணி, முருகன், பொன்னுச்சாமி, பாலமுருகன், கோபி ஆகியோர் ஒருங்கி ணைந்து வெப்பமயமாதலைத் தணிக்கும் விதத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், நடிகர் விவேக் ஆகியோரின் 1 கோடி மரக்கன்று நடும் கனவுத்திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம் என்று தெரிவித்தனர். மேலும் சோழ வந்தான் ஜெயவீர ஆஞ்சநேயர் கோயில் வளாகத்தில் மரக்கன்று நட்டு பணியைத் தொடங்கினர். வாடிப்பட்டி சந்தைவாசல் வேன் ஓட்டுநர்கள் சங்க ஒருங்கி ணைப்பாளர் ராஜேந்திரன் இதுகுறித்து கூறியதாவது:

அப்துல்கலாம், விவேக் விதைத்த விதைகள் இன்று மரமாகி உள்ளன. அவர்களின் வழியில் எங்கள் வருவாயில் குறிப்பிட்ட தொகையில் மரக்கன்றுகளை நடவு செய்வோம். தேவைப்படுவோருக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்குவோம் என்றார்.

 

Tags :

Share via