நாளை மறுதினம் சென்னைக்கு சிகப்பு நிற எச்சரிக்கை

by Editor / 16-11-2021 08:23:59pm
நாளை மறுதினம் சென்னைக்கு சிகப்பு நிற எச்சரிக்கை

வானிலை நிலவரம் குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மைய அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன்,

தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாட்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா -  வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.  இதன் காரணமாக
அடுத்த 24 மணி நேரத்திற்கு கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

18ம் தேதி திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கும் ஓரிரு இடங்களிலும் அதி கனமழைக்கும் வாய்ப்பு.

சென்னையை பொறுத்தவரை 
அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் 
மதுக்கூர் மற்றும் செட்டிகுளம்  தலா 10 செ.மீ மழை அதிகபட்சமாக பதிவாகி உள்ளதாக தெரிவித்த அவர் 18 ம் தேதி சிகப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் எனக்கு அளிக்கப்பட்ட நிலையில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அளவு மாறாமல் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆகவே வட தமிழகம் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளை வரும் 18ஆம் தேதி நெருங்கும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1முதல் தற்போதுவரை இயல்பாக கிடைக்கும் அளவு 29% ஆனால் தற்போது 44%அளவு மழைப் பொழிவு கிடைத்துள்ளது.இது இயல்பை விட  54%அதிகம். சென்னையை பொருத்தவரை அக்டோபர் 1முதல் தற்போது வரை 49%மழைப் பொழிவு இருக்க வேண்டும் ஆனால் தற்போது வரை 82%கிடைத்துள்ளது. இது இயல்பான அளவை விட 67%அதிகமாகும்...

 

Tags :

Share via