மதிய உணவில் பாம்பு மாணவர்களுக்கு பாதிப்பு

by Staff / 10-01-2023 03:29:04pm
மதிய உணவில் பாம்பு மாணவர்களுக்கு பாதிப்பு

மேற்குவங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மதிய உணவில் பாம்பு விழுந்துள்ளது. அதை அறியாமல் மதிய உணவை சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து, பள்ளியில் உள்ள உணவு கிடங்கை அதிகாரிகள் சோதனை செய்தபோது, சமையலுக்கு வைத்திருந்த பருப்பில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சமையல் பொருள்களில் பாம்பு இருந்து சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via