ஓய்வூதியர்கள் அரசு அலுவலகத்திற்கு வரும் போது அலுவலர்கள் கண்ணியமாக நடந்து கொள்ள அறிவுரை
ஓய்வூதியர்கள் அரசு அலுவலகத்திற்கு வரும் போது அலுவலர்கள் கண்ணியமாக
நடந்து கொள்ள அறிவுரை
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட மற்றும் சார் நிலை அலுவலங்களுக்கு அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் அரசு அலுவலகத்திற்கு வரும் போது அலுவலர்கள் ஓய்வூதியரிடம் அணுகும் முறை குறித்து கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.
1) செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு,ஓய்வூதியர்கள் வரும்போது மிகுந்த கண்ணியத்துடனும், பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும்.அவர்களின் கோரிககைகள்மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
2)ஓய்வூதியர்களிடமிருந்து எவ்வித புகாரும் எழாத வண்ணம்,கனிவுடன் நடந்து கொள்ள அனைத்து அலுவலகங்களிலும் உயர் அலுவலர்கள் தங்கள் பணியாளர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.மேலும் இது குறித்து ஓயீவூதியரிடமிருந்து ஏதேனும் புகார் வருமாயின் சம்பந்தப்பட்டஅலுவலர்/பணியாளர்மீது ஓழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறதுஎன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சுற்றறிக்கையில்குறிப்படப்பட்டுள்ளது
Tags :