அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தலைவர்கள் மரியாதை
டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு தினத்தை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
மேலும் அங்கு அலங்கரித்துவைக்கப்பட்ட உருவ படத்திற்கு குடியரசுத் தலைவரும், பிரதமரும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அரசு அமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அண்ணல் அம்பேத்கர் நினைவுநாள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க.பொதுச்செலாளர் வைகோ,
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர் தூவி புகழ் வணக்கம் செய்தனர்.
Tags :