தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை  மேலும் மூன்று மாத அவகாசம் 

by Editor / 30-06-2023 11:47:03pm
தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணை  மேலும் மூன்று மாத அவகாசம்  தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வியாபாரிகளான  தந்தை, மகன் கொலை வழக்கை விசாரிக்க மேலும் மூன்று மாத அவகாசம் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு நீதிபதி நியமிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்று மாதத்தில் சாத்தான்குளம் கொலை வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம் செய்யப்பட்டதால் விசாரணை தாமதமாகிறது என்றும் மேலும், 8 சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டி இருப்பதால் 2-3 மாத அவகாசம் தேவைப்படுகிறது எனவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Tags :

Share via