பேனா நினைவு சின்னம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

by Staff / 09-10-2023 03:13:48pm
 பேனா நினைவு சின்னம் - மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக சென்னை மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்த வழக்கில் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ரூ.81 கோடி மதிப்பீட்டில் 134 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த, நாம் தமிழர் கட்சி சார்பில் வெண்ணிலா மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த ராம்குமார் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Tags :

Share via