ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் பறிமுதல்

by Staff / 09-10-2023 03:16:23pm
ரூ.50 ஆயிரத்துக்கு மேல் இருந்தால் பறிமுதல்

தெலங்கானா, மிசோரம், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்தன.இனிமேல், 50,000 ரூபாய்க்கு மேல் பணம் கொண்டு செல்வோர், அதற்கான ரசீது மற்றும் ஆதாரத்தை காட்ட வேண்டும். இல்லை என்றால் தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து விடுவார்கள். மருத்துவமனை கட்டணங்களை செலுத்துவதற்கும் கூட ரசீது கட்டாயமாக இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via