கஞ்சா வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது

by Staff / 06-04-2023 03:40:47pm
 கஞ்சா வழக்கில் பெண் உட்பட 2 பேர் கைது

தூத்துக்குடியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்படி காவல் துணைக் கண்காணிப்பாளர் சத்தியராஜ் மேற்பார்வையில் தென்பாகம் ஆய்வாளர் ராஜாராம் மற்றும் உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று ரோச் பூங்கா பகுதியில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.இதில், அவர்கள் தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த குமார் மகன் மாரி (எ) மாரியப்பன் (22) மற்றும் தூத்துக்குடி இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரது மனைவி லில்லி (30) ஆகியோர் அவர்கள் விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 650 கிராம் கஞ்சா, ரொக்கப்பணம் ரூ. 8, 650 மற்றும் ஒரு இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மாரி (எ) மாரியப்பன் மீது ஏற்கனவே தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஒரு கஞ்சா வழக்கு, வடபாகம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கு, கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 2 வழக்குகள், கன்னியாகுமரி காவல் நிலையத்தில் திருட்டு உட்பட 2 வழக்குகளும் ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்டன. ஒரு வழக்கு, செந்தாமரைக்குளம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என 9 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via