5 வருஷமா எங்கம்மா போன.. வெற்றி பெற்ற ஜோதிமணி, வந்தா கேளுங்க - எம்.ஆர். விஜயபாஸ்கர்

by Staff / 30-03-2024 02:37:53pm
5 வருஷமா எங்கம்மா போன.. வெற்றி பெற்ற ஜோதிமணி, வந்தா கேளுங்க - எம்.ஆர். விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடும் வெயிலை பொருட்படுத்தாமல் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தங்கவேலுக்கு ஆதரவு கேட்டும், பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்க கரூர் அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர் விஜயபாஸ்கர், இன்று வீரராக்கியம் பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், வெற்றி பெற்றவுடன் 11 மணிக்கு காவிரி ஆற்றில் மணல் அள்ளலாம். எவனும் உங்களை தடுக்க மாட்டான். கேட்டால் அவன் இருக்க மாட்டான். என கூறினார்களே! இப்போது யார் மணல் அள்ளுகிறார்கள்? வெற்றி பெற்ற ஜோதிமணி, ஐந்து வருடமாக இந்த பக்கம் வந்ததை யாராவது பார்த்தீர்களா? வந்தால் அவரிடம் கேளுங்கள் 5 வருஷமா எங்கம்மா போன? என கேள்வியெழுப்பினார்.

 

Tags :

Share via