கள்ளத்தொடர்பு வைத்ததால் கலப்பு திருமணம் செய்த மனைவியை கொலை செய்த கணவன்
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் நவணி தேவேந்திர தெருவில் வசித்து வருபவர் தமிழ்செல்வன் (வயது 25). மரம் வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (22). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.காலையில் எழுந்து வழக்கம்போல் பால் வாங்குவதற்கு வெளியே புறப்பட்டு சென்று பால் வாங்கி விட்டு வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார்.அப்போது நந்தினி, செல்போனில் நீண்ட நேரம் பேசி கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வன் மனைவியை சப்தம் போட்டுள்ளார்.இருவருக்கும் வாக்குவாதம் உருவாகவே ஆத்திரமடைந்த தமிழ்செல்வன் ட்டில் இருந்த அரிவாளை எடுத்து நந்தினியை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதையடுத்து அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த தமிழ்செல்வனை, புதுசத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
விசாரணையில் தனது மனைவியை எதற்காக கொலை செய்தேன் என தமிழ்செல்வன், போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
நான், கடந்த 4 வருடங்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம் பாப்பிநாயக்கன்பட்டி அருகே உள்ள முள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த நந்தினியை சந்தித்தேன். அப்போது எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் வெவ்வேறு பிரிவை சேர்ந்தவர்கள் என்பதால் நந்தினியின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.
இந்த எதிர்ப்புகளை மீறி நாங்கள் இருவரும் கலப்பு திருமணம் செய்துகொண்டு நவணி தேவேந்திர தெருவில் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். இருப்பினும் இந்த மகிழ்ச்சி எங்களுக்குள் வெகு நாட்கள் நீடிக்கவில்லை. கள்ளக்காதல் விவகாரம் எங்களது வாழ்க்கையை அடியோடு புரட்டி போட்டது.
இதற்கு காரணம் எங்களது ஊரில் மளிகை கடை நடத்தி வரும் கண்ணூர்பட்டியை சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் தான். மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த எங்களது வாழ்க்கையை சீர்குலைத்தார். எனது மனைவி மீது அவரது கண் பார்வை பட்டது.
புதுசத்திரம் சென்று மளிகை பொருட்கள் வாங்க நேரம் ஆகும் என்பதால் அவருடைய மளிகை கடையில் நந்தினி பொருட்கள் வாங்கி வந்தார். அப்போது அவர், எனது மனைவியிடம் ஆசைவார்த்தைகளை அள்ளிவிட்டார்.
இதை அறிந்த நான், ரமேஷை கண்டித்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நந்தினியும் பலமுறை எச்சரித்தார். ஆனாலும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. அவசரத்திற்கு அந்த மளிகை கடையை நாட வேண்டி இருந்ததால் வேறு வழியில்லாமல் சமையலுக்கு தேவையான பொருட்களை அந்த கடையில் வாங்கி வந்தோம்.
தன்னை பற்றி தினந்தோறும் தவறாக சொல்லி நந்தினி மனதை மாற்றி, தன் வசப்படுத்தினார். இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதனால் எங்களது குடும்பத்தில் பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டது. இதனிடையே 2 பேருடைய பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இந்த கள்ளதொடர்பு விஷயம் எனக்கு தெரியவரவே நான், நந்தினியிடம் இனிமேல் ரமேஷிடம் பேசாதே, பழகாதே என சத்தம் போட்டேன்.வர கேட்காமல் இருந்துவந்தார்.இன்று காலையிலும் அவரிடம் செல்போனில் விடாமல் பேசியபடியே இருந்தார் குழந்தை அழுவதுகூட தெரியாமல் செல்லில் பேசியதால் கொலை செய்ததாக அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்ததக
Tags :